பிரதேச சிறுவர் அபிவிருத்தி, பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைப்பதற்கான செயலணி, உளச்சமூக ஒன்றியம் தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம்
எமது பிரதேச செயலகப்பிரிவில் உள்ள சிறுவர் மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பான கலந்துரையாடல் பிரதேச செயலாளர் இ.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் 2023.09.13 ஆந் திகதியன்று நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
இதன்போது அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் எவ்வாறு சிறுவர் மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இணைந்து சேவையாற்றுவது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோரும் பங்குபற்றியிருந்தனர்.



















